கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ஜூன் 12-தேதி இயக்குனர் விஜய்-அமலாபால் திருமணம் நடைபெறயிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதற்கிடையே டைரக்டர் விஜய் சைவம் பட வேலைகளிலும், அமலாபால் தனது கைவசம் உள்ள வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட சில பட வேலைகளிலும் தீவிரமாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு அமலாபால் நடிக்க மாட்டார் என்று ஆரம்பத்தில் செய்தி பரவியது. ஆனால், இப்போதோ அதுபற்றி தன்னிடம கேட்டவர்களிடம், நடிப்புக்கு திருமணம் ஒரு தடையே இல்லை. தொடர்ந்து நான் நடித்துக்கொண்டிருப்பேன் என்று கூறி வருகிறார் அமலாபால். அதனால்தான் தன் மீது ஒரு தெலுங்கு படாதிபதி அவதூறு பரப்பியபோதுகூட உடனடியாக களத்தில் இறங்கி அதற்கு பதில் கொடுத்து தனது பெயர் கெட்டுப்போகாத வண்ணம் பார்த்துக்கொண்டார் அமலாபால்.
மேலும்,. தான் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிக்கயிருப்பதை அவர் சில அபிமான டைரக்டர்களிடம் கூறி வந்தபோதும், எந்த டைரக்டரும் படம் தருவதாக அமலாபாலிடம் சொல்லவில்லையாம். திருமணத்திற்கு பிறகு நடிகைகள் மீதான கிரேஸ் குறைந்து விடும் என்பதால் இனி அவரை கதாநாயகியாக நடிக்க வைக்க முடியாது என்ற முடிவுக்கே வந்து விட்டார்களாம.
இருப்பினும், தமிழ், தெலுங்கு சினிமாக்கள் தன்னை கைவிட்டாலும் தனது தாய்மொழியான மலையாள சினிமா ஆதரிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் அமலாபால், தனது இமேஜை பாதிக்காத குடும்பப் படங்களில் தொடர்ந்து நடிக்கும் முடிவில் உள்ளாராம்.