தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னை 28 படத்தில் வெங்கட்பிரபு டீமில் இணைந்தவர் விஜய்வசந்த். அதையடுத்து, தோழா, சரோஜா, நாடோடிகள், கனிமொழி, மங்காத்தா போன்ற படங்களில் நடித்தவர், மதில் மேல் பூனை என்ற படத்தில் ஷோலோ ஹீரோவாக களமிறங்கினார். அதுவரை எந்த படத்திலும் சண்டை காட்சிகளில் நடிக்காத அவர், அந்த படத்தில் கதாநாயகன் என்பதால் பைட் சீனில் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான என்னமோ நடக்குது படத்திலும் சண்டை காட்சிகளில் நடித்த விஜயவசந்த், அடுத்து நடித்து வரும் தெரியாம உன்னை காதலிச்சிட்டேன் என்ற படத்தில் சில சண்டை காட்சிகளில நடித்துள்ளாராம். முந்தைய படங்களில் சண்டை காட்சியில் நடிக்க ரொம்பவே கஷ்டப்பட்ட விஜயவசந்த், சில மாதங்களாக முறையான சண்டை பயிற்சி பெற்றுள்ளாராம்.
அதனால், இனி தான் நடிக்கும் புதிய படங்களில் சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம கொடுக்கப்போகிறாராம். இதுபற்றி விஜயவசந்த் கூறுகையில், சினிமாவில் வெறும் ரொமான்ஸ் மட்டுமே பண்ணிக்கொண்டிருந்தால், மந்தமான ஹீரோவாகத்தான் இருக்க முடியும். ஆனால், அதிரடியான சண்டை காட்சிகளில் நடித்தால்தான் பரபரப்பான நடிகராக முடியும். அதனால்தான் எனது கவனமும் ஆக்சன் கதைகள் பக்கம் திரும்பியிருக்கிறது என்று சொல்லும் அவர், தற்போது அதற்கான கதை தேடலில் ஈடுபட்டிருக்கிறாராம்.