ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
பொம்மலாட்டம், வைராக்கியம் தொடர்கள் மூலம் பிரபலமானவர் கவுரிலட்சுமி. இப்போது சீரியலில் நடிப்பதை கைவிட்டுவிட்டு சினிமாவில் தீவிரம் காட்டி வருகிறார். வணக்கம் சென்னை, என்னமோ ஏதோ, படங்களில் நடித்த அவர் கையில் இப்போது நான்கைந்து படங்கள் இருக்கிறது. அதனால் சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: "சின்னத்திரைக்குள் ஒரு மாணவியாக நுழைந்தேன். 5 ஆண்டுகள் ஓடிவிட்டது. முதலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம் ஆனேன். ஓரிரு நிமிடங்கள் கேமரா முன் நின்று பேசிவிட்டு ரிலாக்ஸ் ஆகிக் கொள்ளலாம். அப்புறம் சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். டைரக்டர் சொல்லும் போது அழுது, சொல்லும்போது சிரித்து ஒரு கட்டத்தில் அதுவும் போரடித்து விட்டது. இப்போது நிறைய சினிமா வாய்ப்புகள் வருகிறது. சின்னத்திரை, பெரியதிரை இரண்டிலும் ஒரே நேரத்தில் டிராவல் பண்ண முடியாது என்பதால் இனி பெரிய திரையே என்று முடிவு செய்து விட்டேன்" என்கிறார் கவுரிலட்சுமி.