வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
'புத்தகம்' படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமான சத்யா யார் தெரியுமா? நடிகர் ஆர்யாவின் தம்பி. அந்தப் படத்தின் தோல்வியினால் துவண்டுபோயிருந்த சத்யா பிறகு சுதாரித்துக் கொண்டு தற்போது 'அமர காவியம், எட்டுத்திக்கும் மதயானை, காதல் டூ கல்யாணம்' ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவற்றில் 'அமர காவியம்' படத்தை ஆர்யாவே தன்னுடைய தி ஷோ பீப்பிள் பேனரில் தயாரிக்கிறார். விஜய் ஆண்டனியை வைத்து 'நான்' படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
'அமர காவியம்' படத்தை ஆர்யா தயாரிக்க என்ன காரணம் ?
“அமர காவியம்' படத்தின் இயக்குனரான ஜீவா சங்கர் சொன்ன கதை மிகவும் சிறப்பான கதை. அதோடு, அவர்தான் சத்யாவிடம் நடிகனகாக வேண்டும் என்ற ஆசையை விதைத்தவர். அதனால் இருவரும் சேர்ந்து நல்ல படத்தைத் தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது,” என்ற ஆர்யா அடுத்து சொன்னதுதான் ஆச்சரிய செய்தி. “சத்யா பெரிய நடிகனாகிவிட்டால், எனக்கும் அவனுக்கும் கூட போட்டி வந்து விடும் என்று நினைக்கிறேன். அவன் பெரிய நடிகனாகி விட்டால், உடனடியாய் அவன் சொந்த வீடு வாங்க வேண்டும். இப்போதிருக்கும் வீட்டை விட்டு அவன் வெளியே போய் விட வேண்டும்,” என்கிறார்.
தம்பியை வீட்டை விட்டு விரட்டுவதில் ஆர்யா அவசரம்காட்டுவதைப் பார்த்தால்... ஆர்யா வீட்டில் சீக்கிரமே கெட்டிமேளச்சத்தம் கேட்கப்போகிறதோ