ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், மகேந்திரன் கடைசியாக 2006ல் சாசனம் என்றொரு படத்தை இயக்கினார். அதையடுத்து சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் படம் இயக்குவதில் இருந்து தள்ளியிருந்தார். ஆனால், தற்போது ஒரு புதிய கதையை ரெடி பண்ணிக்கொண்டு அந்த படத்தை புதுமுகங்களை வைத்து இயக்கப்போவதாக அறிவித்தார்.
அப்படத்துக்கும் தனது ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவே இசையமைப்பதாக தெரிவித்த மகேந்திரன், என் படங்களில் எப்போதுமே இளையராஜாவின் பின்னணி இசைதான் வசனங்களாக அமையும். அதோடு பெரும்பாலான எனது படங்களுக்கு அவர்தான் டைட்டீலே சொல்வார். அதனால் இந்த படத்திற்கு டைட்டில் வைக்கும் பொறுப்பையும் அவரிடமே விட்டிருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
ஆனால், இந்த படத்தை தயாரிப்பது யார் என்பதை அப்போது அவர் சொல்லவில்லை. ஆனால் இப்போது அப்படத்தை பிரகாஷ்ராஜ் தயாரிப்பதாக கூறப்படுகிறது. உன் சமையல் அறையில் படத்திற்கு இளையராஜாவிடம் அவர் இசையமைக்க சென்றபோதுதான், மகேந்திரன் நல்லதொரு கதை வைத்திருக்கும் விசயத்தை சொல்லியிருக்கிறார் இளையராஜா.
கமர்சியல் என்பதை கருத்தில் கொள்ளாமல் எப்போதுமே நல்ல கதைகளுக்கு மட்டுமே முக்கியத்தும் கொடுத்து படங்கள் தயாரித்து வரும் பிரகாஷ்ராஜிற்கு மகேந்திரன் சொன்ன கதை பிடித்து விட்டதாம். அதனால் தான் அப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளாராம். அதோடு, அப்படத்தில் ஒரு முக்கியத்துவம வாய்ந்த வேடத்திலும் நடிக்கிறாராம் அவர்.