'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ரஜினிகாந்த்தின், 'கோச்சடையான்' படம் இன்று வெளியாக இருந்த சூழ்நிலையில், திடீரென வெளியீட்டுத் தேதியை மாற்றியிருக்கிறது, தயாரிப்பாளர் தரப்பு. இம்மாதம், 23ம் தேதி, படம் வெளியாகும் என, தயாரிப்பாளர் தரப்பு அறிவித்திருக்கிறது.
அதிர்ச்சி:இந்த தாமதத்திற்கு தொழில் நுட்ப பிரச்னை தான் காரணம் என, தயாரிப்பு நிறுவனம் சொன்னாலும், படத்தை வாங்கியிருக்கும் வினியோகஸ்தர்கள், திடீரென படத்தின் விலையை குறைக்கச் சொல்லி வற்புறுத்தியதாலேயே, அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் தரப்பு, பட வெளியீட்டை தள்ளி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து, சினிமா வட்டாரங்களில் கூறியதாவது:
'கோச்சடையான்' படத்தை, ரஜினியின் மகள் சவுந்தர்யா தான் தயாரித்துள்ளார். படபிடிப்பு முடிந்து, படத்தை வெளியிடுவதற்கு முன், செய்ய வேண்டிய காரியங்களை, தயாரிப்பாளர் தரப்பு செய்து கொண்டிருந்தது. படத்தை, தமிழகம் முழுவதும் வெளியிட வினியோகஸ்தர்கள் பலரும் முன் வந்தனர்.
குறிப்பிட்ட தொகைக்கு படத்தை பேசி முடித்து, முன் தொகையும் கொடுத்தனர். தமிழகத்தில் மட்டும், 500 தியேட்டர்களில் படத்தை வெளியிட, அவர்கள் ஒப்புக்கொண்டனர். அந்த அடிப்படையில்தான் படத்தை, மே, 9ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் தரப்பு முடிவெடுத்து, அதற்கான காரியங்களில் தீவிரமாக இறங்கியது.
இந்த நிலையில், 'நாங்கள் ஏற்கனவே பேசிய தொகையை கொடுக்க மாட்டோம். பேசப்பட்டத் தொகையில் இருந்து, குறைத்துக் கொடுத்தால் தான், படத்தை வெளியிடுவோம். ஏற்கனவே, ரஜினி படத்தை வெளியிட்டதில் எங்களுக்கு நிறைய நஷ்டம்; அதை ஈடுகட்ட, இந்த படத்தை குறைந்த தொகைக்கு கொடுக்க வேண்டும். அல்லது ஏற்கனவே ஏற்பட்ட நஷ்டத்தை உடனடியாக, 'செட்டில்' செய்ய வேண்டும். அல்லது, எங்கள் நஷ்டத்தை பொறுப்பேற்பதாக, ரஜினி நேரில் வந்து சொல்ல வேண்டும்' என, வினியோகஸ்தர்கள் முரண்டு பிடித்தனர்.
ஒப்புக்கொள்ளவில்லை:'பிரச்னையை பேசி தீர்க்கலாம். அறிவிக்கப்பட்ட தேதி யில் படத்தை வெளியிடுங்கள். படத்தில் ரஜினி நடித்திருக்கிறார், அவ்வளவு தான். மற்றபடி, அவருக்கும் படத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது' என, தயாரிப்பாளர் தரப்பு கூறியது. ஆனால், அதற்கு வினியோகஸ்தர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பின் தான், படத்தை, 23ம் தேதிக்கு வெளியிடப் போவதாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தது.
இவ்வாறு, சினிமா வட்டாரங்கள் கூறின.
பின்னணியில் அரசியல்? நடிகர் கமலஹாசனின், 'விஸ்வரூபம்' படத்துக்கு பிரச்னை ஏற்பட்டு, இறுதியில், முதல்வர் தலையிட்டு முடித்து வைத்தது போல, ரஜினியின், 'கோச்சடையான்' படத்துக்கும் வினியோகஸ்தர்கள் மூலம் பிரச்னையை சிலர் கிளப்பி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர் என, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக செய்தி பரவி இருக்கிறது.'ஆனால், இந்த பிரச்னையில் துளியும் அரசியல் கிடையாது' என, தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர்கள் தரப்பு சொல்ல, ரஜினி ரசிகர்கள் நிம்மதி அடைந்திருக்கின்றனர்.- நமது சிறப்பு நிருபர் -