டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து, திறமையான நடிகையாக பல தரப்பினராலும் பாராட்டுகளைப் பெற்றார். சில வருடங்களில் அவர் மிகச்சிறந்த நடிகையாக உச்சத்தைத் தொடுவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் அஞ்சலியின் வாழ்க்கையில் அவரது சித்தி ரூபத்தில் விதி விளையாடியது.
இதுநாள்வரை அஞ்சலியின் அம்மா என்று சொல்லப்பட்ட பாரதிதேவி அவரது அம்மாவே இல்லை என்றும், பாரதிதேவியும், இயக்குநர் மு.களஞ்சியமும் சேர்ந்து கொண்டு தன்னை துன்புறுத்துவதாகவும், தன் சொத்தை அபகரிக்க திட்டம் தீட்டுவதாகவும் பகீர் குற்றச்சாட்டைச் சொன்னார் அஞ்சலி. அதுமட்டுமல்ல, சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சென்னையிலிருந்து, ஹைதராபாத் சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். அதன் பிறகு அவர் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. அஞ்சலி எங்கிருக்கிறார் என்ற தகவலும் இங்கு யாருக்கும் தெரியவில்லை. தெலுங்குப் பட விழாக்களில் மட்டும் அவ்வப்போது தலையைக் காட்டி வந்தார்.
இந்நிலையில் அஞ்சலி பற்றி புதிய தகவல்...! தற்போது அவர் கன்னடப் படடங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கீதாஞ்சலி என்ற படத்திலும், அடுத்து தீர ராணா விக்ரமா என்ற படத்தில் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.