பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில், எனக்கு பெரிய ஆட்களைப் பற்றி கவலை இல்லை. என் பக்கத்தில் உள்ளவங்கதான் எனக்கு முக்கியம் என்கிற ரீதியில் தன் நண்பர்களை உயர்த்தும் விதத்தில் சந்தானம் மனம் திறந்து பேசியது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. சந்தானத்தின் இந்த பேச்சு, அவருடன் பல படங்களிள் இணைந்து நடித்த முன்னணி கதாநாயக நடிகர்கள் சிலரை வருத்தப்பட வைத்திருக்கிறது. சந்தானம் குறித்த தங்களின் வருத்தத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக, சந்தானத்தின் பேச்சு சிம்புவைத்தான் ரொம்பவே வருத்தப்பட வைத்துவிட்டதாம். தனக்கும் சந்தானத்துக்கும் பொதுவான நண்பராக இருக்கும் விடிவி கணேஷிடம் இது குறித்து தன் அதிருப்தியை வெளியிட்டாராம் சிம்பு. சின்னத்திரை நடிகராக இருந்த சந்தானத்தை மன்மதன் படத்தில் அறிமுகப்படுத்தியதே சிம்புதான். அது மட்டுமல்ல, தன்னுடைய எல்லாப்படங்களிலும் சந்தானத்துக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வந்தார். அப்படிப்பட்ட சிம்புவையே சந்தானத்தின் பேச்சு வருத்தப்பட வைத்திருக்கிறது.
இது ஒரு பக்கமிருக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் "லிங்கா" படத்தில் சந்தானத்தை நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காக பரிசீலித்து வந்தனர். "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சந்தானம் பேசியது பற்றி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியின் காதில் போட்டிருக்கிறார். இந்த காரணத்தினால் "லிங்கா" படத்தில் சந்தானத்தை நடிக்க அழைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டதாகக் கேள்வி.