தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் விஜயகாந்த், அரசியலில் பிஸியாகிவிட்டதால் அவரது வாரிசை சினிமாவில் களம் இறக்கிவிட்டுள்ளார். விஜயகாந்தின் இரண்டாவது வாரிசான சண்முக பாண்டியன், சகாப்தம் எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். வல்லரசு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய, சந்தோஷ் குமார் இந்த படம் மூலம் இயக்குனர் ஆகிறார். விஜயகாந்த் இப்படத்தை தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் தனது இல்லத்திலேயே இப்படத்தின் பூஜையை வெகு விமரிசையாக நடத்தினார் விஜயகாந்த். இதில் ஏராளமான திரையுலகினரும் கலந்து கொண்டு சண்முக பாண்டியனை வாழ்த்தினர். இப்படத்தின் கதை, குடும்பம், காதல், சென்டிமென்ட் என்று அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ள படமாக உருவாக இருக்கிறது.
தன் மகனின் முதல் படம் என்பதால், ஒவ்வொரு காட்சியும் நன்றாக வர வேண்டும் என்பதற்காக விஜயகாந்த்தே படத்தின் முழு கதை விவாதத்திலும் கலந்து கொண்டு இந்தக்காட்சியை அப்படி வையுங்கள், அந்தக்காட்சியை இப்படி வையுங்கள் என்று ஆலோசனை வழங்கி வந்தவர், இப்போது படத்தின் முதற் பகுதியை அவரே இயக்கவும் உள்ளாராம். அரசியலில் பிஸியாக இருந்தபோதும், தன் மகனின் முதல்படத்தை எப்படியேனும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக விஜயகாந்த் இந்தளவுக்கு மெனக்கெடுகிறாராம்.