ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு பெங்களூரில் தொடங்கப்பட்டதில் இருந்தே கன்னட அமைப்பினர் அங்கு ரஜினி படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று போர்க்கொடி பிடித்து வருகின்றனர். தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பவர்களை உதைக்க வேண்டாமா என்று எப்போதோ ரஜினி பேசியதை இப்போது கையில் எடுத்துக்கொண்டு பிரச்னை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதனால் தன்னைச்சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் நின்று கொண்டிருக்க கலவரமான மனநிலையுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் ரஜினி. தற்போதைய நிலவரப்படி, ரஜினியின் கர்நாடகத்து நண்பர்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் அவருக்கு நண்பர்கள் இருப்பதால், பாதுகாப்பாகவே படப்பிடிப்பு நடந்து வருகிறது.
என்றாலும், எந்த நேரமும் செக்யூரிட்டியுடன் படப்பிடிப்பு நடத்தினால் நடிப்பவர்களின் மனநிலை குழம்பும் என்பதால், தற்போது லிங்காவுக்காக பிரமாண்டமான செட அமைக்கும் பணி வேகமாக தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் மட்டும் பொது இடங்களில் படப்பிடிப்பை நடத்தி விட்டு பின்னர் இன்டோர் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துகிறார்களாம்.
மேலும், அவுட்டோரில் படமாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த பெருவாரியான காட்சிகளை இன்டோரில் படமாக்க முடிவு செய்து, தற்போது ஸ்கிரிப்டில் சில அதிரடி மாற்றங்களை அவசரகதியல் செய்து கொண்டிருக்கிறாராம் கே.எஸ்.ரவிக்குமார்.