ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் தயாராகும் புதிய திரைப்படங்களின் பாடல்கள், காட்சிகள், காமெடி, திரைப்பட விழாக்கள் ஆகியவற்றை கேபிள் டி.விக்கள் ஒளிபரப்பி வருகிறது. (திருட்டுத்தனமான முழு படத்தையும் ஒளிபரப்புவது தனி). இந்த ஒளிபரப்பை செய்ய கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் தங்கள் அமைப்பின் மூலம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பணம் கட்டிவருகிறார்கள். இதில் முறைகேடுகள் நடந்து வருவதாக நீண்டகாலமா குற்றச்சாட்டுகள் உண்டு. இப்போது இதனை தயாரிப்பாளர் சங்கம் முறைப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கேபிள் டி.வி மூலம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சேரவேண்டிய பணத்தை சேரவிடாமல் தடுத்து ஏமாற்றி வந்துள்ளனர். இதனை இப்போது கண்டறிந்துள்ளோம். உரிய பணம் வந்து சேராததால் பல தயாரிப்பாளர்கள் தங்கள் சொத்துக்களை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் மாதம் 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் வகையில் ஒரு திட்டம் தீட்டி இருக்கிறோம். கேபிள் டி.வி மூலம் கிடைக்கும் வருவாயில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் அனைத்து தயாரிப்பாளர்களின் வங்கி கணக்கிலும் செலுத்தப்படும். இதற்காக தனியாக ஒரு வங்கி கணக்கை துவங்கி அதன் விபரத்தை சங்கத்திடம் அளிக்க வேண்டுமாய் தயாரிப்பாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.