'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பொன்னிவள வீர சரித்திரம் என்ற தொலைக்காட்சி தொடர் ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கு நடிகர் சிவகுமார் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். அதில் அவர் கொங்கு நாட்டு வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தையும், பொற்கொல்லர் சமுதாயத்தையும் இழிவு படுத்தும் வகையில் சில வசனங்களை பேசியிருப்பதாக அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த புகார் குறித்து சிவகுமார் கூறியிருப்பதாவது: சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் பகுதியில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை கொண்ட புதினம் இது. கனடாவைச் சேர்ந்த பிருந்தா பெக் என்ற பெண், கரூர் பகுதியில் 2 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து இதனை உருவாக்கி உள்ளார். இதற்காக பிருந்தா பெக்கிற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். பிருந்தா சிரம்மேற்கொண்டு செய்த பணிக்கு என்னால் முடிந்த சிறு உதவியை செய்திருக்கிறேன். அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சில நிமிட நேர குரல்பதிவு கொடுத்திருக்கிறேன்.
இந்த விஷயத்தை ஜாதி பிரச்னையாக்குவது வெளிநாட்டிலிருந்து வந்து அந்த பெண் செய்திருக்கும் மகத்தான காரியத்தை கொச்சைப்படுத்துவதாகும். ஜாதி உணர்வுகளுக்கெல்லாம அப்பாற்பட்டவன் நான். என் குழந்தைகளுக்கு வெவ்வேறு ஜாதியில் மணம் முடித்திருக்கிறேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவத்தை கடைபிடித்து வாழ்கிறவன் நான்.
இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.