வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
கற்றது தமிழ் படத்தில் இயக்குனரானவர் ராம். அதையடுத்து தங்கமீன்கள் படத்தை இயக்கியவர் இப்போது தரமணி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் தங்க மீன்கள் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ராம்.
இந்நிலையில், ஒரு படம் ஓடுவதை வைத்துதான் அது சிறந்த படம் என்று யாருமே நினைப்பதில்லை. அந்த படத்தின் கதை அவர்களை பாதித்திருந்தால் எந்த காலத்திலும் அந்த படத்தைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த வகையில், தங்க மீன்கள் படம் பெரிய வசூல் இல்லை என்றாலும், படம் மக்களை பெரிதாக பாதித்திருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக மேடைகளில் இந்த படம் பற்றி பேசுகிறார்கள். மீடியாக்களில் இந்த படத்தை பல இடங்களில் மேற்கோள் காட்டுகிறார்கள். ஆக, தங்கமீன்கள் மக்களை பெரிதும் கவர்ந்த படமாகியிருக்கிறது என்கிறார்.
மேலும், இந்த தங்க மீன்கள் படத்தில் அப்பா-மகளுக்கிடையிலான உறவை பற்றி படமெடுத்த எனக்கு அடுத்து ஒரு தாய்-மகனுக்கிடையிலான கதையை படமாக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனால் பேரறிவாளனின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வரும் அவரது தாயின் போராட்டம் கவனிக்கப்பட வேண்டிய விசயம். அதனால் அந்த அற்புதம் அம்மாள்-பேரறிவாளனை மையமாக வைத்து அடுத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டிருக்கிறேன் என்று கூறும் ராம், தரமணி முடிந்ததும் அந்த கதையை படமாக்குகிறாராம்.
ஆக, ஒரு பரபரப்பான படைப்பை கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் டைரக்டர் ராம்.