ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வசந்த் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்தது. முதன் முதலில் தேசப்பற்றை குறிக்கும் வகையில் இந்தியாவின் வரைபடத்தையே தனது லோகோவா கொண்டு தொடங்கப்பட்ட முதல் டி.வி. இது. எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் முன்னணி வகிக்கும் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் வசந்தகுமாரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
போட்டிகள் நிறைந்த தொலைக்காட்சி உலகில் வசந்த் டி.வி தனக்கென எளிய பாதையை வகுத்துக் கொண்டு பயணிக்கிறது. தேனருவி, ஊரும் பேரும், தாயில்லாமல் நானில்லை, ரகசிய கேள்விகள், ஆலய தரிசனம் போன்றவை வசந்த் டி.வியின் முக்கிய நிகழ்ச்சிகள். அலைகள் ஒய்வதில்லை, பராசக்தி போன்ற தொடர்களையும் ஒளிபரப்புகிறது.
7ம் ஆண்டு விழாவை தொலைக்காட்சியின் நிறுவனர் வசந்தகுமார் கேக் வெட்டி கொண்டாடினார். இதில் அவரது மனைவி தமிழ்செல்வி வசந்தகுமார், மகன்கள், விஜய் வசந்த், வினோத்குமார், இயக்குனர் ராஜபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.