ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இளையராஜா - வைரமுத்து இருவரும் ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர்கள். அவர்களை இணைத்து வைத்தவர் பாரதிராஜாதான். தான் இயக்கிய படங்களுக்கு இளையராஜாவை இசையமைக்க வைத்தது போன்று, பாடல் எழுத வைரமுத்துவையே தொடர்ந்து அவர் பயன்படுத்தி வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் இளையராஜா-வைரமுத்துவுக்கிடையே ஈகோ போர் வெடித்தது. என் இசையால்தான் பாடல்கள் ஹிட்டாகிறது என்று இளையராஜா சொல்ல, என் வரிகளினால்தான் பாடல்கள் ஹிட்டாகின்றன என்று வைரமுத்து சொல்ல, நானா நீயா என்கிற போட்டி உருவாகி அவர்களின் கூட்டணியே உடைந்து போனது. அதையடுத்து அவர்களை இணைத்து வைக்க பாரதிராஜா எடுத்து எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. ஒருவர் கலந்து கொள்ளும் விழாவில் இன்னொருவர் கலந்து கொள்வதில்லை என்பதை இன்றுவரை கடைபிடித்து வருகின்றனர்.
இந்தநிலையில், இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜாவையும், கவிஞர் வைரமுத்துவையும் இடம் பொருள் ஏவல் படத்தை இயக்கி வரும் சீனுராமசாமி, அப்படம் மூலம் இணைத்து வைத்தார். அதையடுத்து இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன் படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வைரமுத்துவின் பாடலை பாடியிருக்கிறார் இளையராஜாவின் மகள் பவதாரிணி.
ஏற்கனவே வைரமுத்துவுடன் யுவன் ஷங்கர் இணைந்தது எனக்கு பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக கருத்து சொன்ன கார்த்திக்ராஜா, இப்போது வைரமுத்து எழுதிய பாடலை தங்கை பவதாரிணி பாடியதற்கு என்ன சொல்லப்போகிறரோ தெரியவில்லை.