‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அனாமிகா படத்தை முடித்த நேரத்தில்தான் இது நம்ம ஆளு படத்துக்காக மீண்டும் சிம்புவுடன் நயன்தாராவை இணைக்க திட்டமிட்டார் டைரக்டர் பாண்டிராஜ். இதெல்லாம் நடக்காது. வீண் முயற்சி என்று பலரும் அபசகுணமாக பேசியபோதும், முடித்துக்காட்டுகிறேன் என்று நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் பாண்டிராஜ்.
முதலில், சிம்புவுடனா? நானா? என்று பல அதிர்ச்சி கேள்விகளை கேட்ட நயன்தாராவிடம், நீங்களேதான் ஒரு நடிகையாய் அவருடன் மீண்டும் நடிப்பதில் எந்த பிரச்னையும் வராது. நான் உங்களுக்கு முழு கியாரண்டி தருகிறேன் என்று சொல்லி, தனது வார்த்தை சாதுர்யத்தினால் நயன்தாராவை தன் வழிக்கு கொண்டு வந்தார் பாண்டிராஜ்.
ஆனால் அப்படி கஷ்டப்பட்டு மறுபடியும் இது நம்ம ஆளுக்காக சிம்புவுடன் இணைத்து படப்பிடிப்பும் நடத்தினார். ஆனால், ஆரம்பத்தில வேகமாக தொடங்கிய படப்பிடிப்பு இப்போது சிம்பு வாலு பட வேலைகளில் இறங்கி விட்டதால், இழுபறியில் கிடக்கிறது. இதனால் கைவசம் பல படங்கள் வைத்திருககும் நயன்தாரா இவர்களுக்கு கொடுத்த மொத்த கால்சீட்டும் முடிந்து விட்டதாம். அதனால், அடுத்தபடியாக இவர்களை மறந்து விட்டு தனது புதிய பட வேலைகளில் மும்முரமாகி விட்டார்.
இந்த நேரத்தில் வாலு ரிலீசுக்குப்பிறகு இது நம்ம ஆளு படத்திற்கு வருவோம் அப்போது கால்சீட் தர வேண்டும் என்று நயன்தாராவிடம் சிம்பு தரப்பு கூறியிருக்கிறதாம். ஆனால், அவரோ, உங்களுக்கு நான் கொடுத்த கால்சீட் முடிந்து ரொம்ப நாளாகி விட்டது. அதனால், இனிமேல் நான் எப்போது கால்சீட் தருகிறேனோ அப்போதுதான் நீங்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று கண்டிசனாக சொல்லிவிட்டாராம் நயன்தாரா.