Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படத்தின் க்ளைமாக்ஸ் நிஜ வாழ்க்கையிலும் நடந்தது!

07 மே, 2014 - 12:30 IST
எழுத்தின் அளவு:

அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, வீடு, வண்ண வண்ணப் பூக்கள் உள்பட பல படங்களை இயக்கியவர் கேமரா கவிஞன் பாலுமகேந்திரா. கடைசியாக தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி, தான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தாத்தா-பேரனுக்கிடையே உள்ள உன்னதமான பாசத்தை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்ட அப்படத்திற்கு இந்திய அரசு சிறந்த படத்திற்கான தேசிய விருதினை அறிவித்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே அவர் இறந்து விட்டார். அதனால் சில தினங்களுக்கு முன்பு அப்படத்திற்காக ஜனாதிபதி வழங்கிய தேசிய விருதினை பாலுமகேந்திரா சார்பாக அவரது பேரன் பெற்றுக்கொண்டார்.


இந்நிலையில், நேற்று தலைமுறைகள் படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, பாலுமகேந்திரா படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டவர்கள், அவருக்கு நன்றியும், அஞ்சலியும் செலுத்தினர். அதைத் தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சசிகுமார் பேசும்போது, தலைமுறைகள் படத்தின் க்ளைமாக்சில் பாலுமகேந்திரா சாரின் பேரன் என்ற முறையில் அவர் இறந்த பிறகு அவருக்கான விருதினை நான்தான் பெற்றுக்கொண்டேன். அது இப்போது நிஜத்திலும் நடந்துள்ளது. அவருக்கான விருதினை ஜனாதிபதி கையினால் அவரது பேரன் பெற்றுக்கொண்டார். சினிமாவில் அவர் வைத்த க்ளைமாக்ஸ் நிஜத்திலும் இப்போது நடந்திருக்கிறது என்று நினைவுகூர்ந்த சசிகுமார், அதையடுத்து பாலுமகேந்திராவின் பேரனையும் மேடைக்கு அழைத்து சில வார்த்தைகள் பேச வைத்தார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in