ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பாலுமகேந்திரா கடைசியாக இயக்கி, ஒளிப்பதி செய்ததுடன், அப்படத்தில் முக்கியமான வேடத்திலும் நடித்த படம் தலைமுறைகள். இப்படத்தை நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சசிகுமார் தயாரித்து இருந்தார். இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த இப்படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டு பெற்றது. இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இருதினங்களுக்கு முன்னர் தேசிய விருதை, ஜனாதிபதி கையால் வாங்கிவிட்டு வந்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார்.
தேசிய விருதை வாங்கியதை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார் சசி. அப்போது பேசிய சசிகுமார், தலைமுறைகள் படத்திற்கு தேசிய விருது வாங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேசமயம் இந்த தருணத்தில் பாலுமகேந்திரா அவர்கள் இல்லாதது வருத்தத்தையும் அளிக்கிறது. சினிமாவை இயக்க வயது கிடையாது. எந்த வயதிலையும் படத்தை இயக்கலாம் என்று நிரூபித்து காட்டியவர் பாலுமகேந்திரா. இதுபோன்ற படங்களை நான் மட்டும் அல்ல, இன்றைய தலைமுறையினரும் எடுக்க முன்வர வேண்டும். இதன்மூலம் இந்த தலைமுறையினர், சென்ற தலைமுறையினரை கவுரவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். நான் பெற்ற இந்த விருதையும், பரிசையும் எனக்கு மட்டுமல்ல, சினிமாவை நேசிக்கிற அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என்றார்.
இளையராஜாவிடம் ஆசி...
பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு முன்னதாக தேசிய விருதை பெற்றதை, 'தலைமுறைகள்' படத்தின் இசையமைப்பாளர், இசைஞானி இளையராஜாவிடம் கொடுத்து ஆசி பெற்றார் சசிகுமார்.