'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தேனிசைத் தென்றல் தேவாவின் தம்பிகளில் ஒருவர் சம்பத். தேவா பிஸியான இசையமைப்பாளராக இருந்தபோது தன்னுடைய நான்கு தம்பிகளுக்கும் ஆளுக்கொரு வேலையைக் கொடுத்து அவர்களின் வருமானத்துக்கு வழி செய்து கொடுத்திருந்தார். அதன்படி சம்பத்துக்கு கொடுக்கப்பட்ட வேலை...கச்சேரி செய்ய தேவாவைத் தேடி வருகிறவர்களிடம் பேசி கச்சேரிகளை கன்ஃபர்ம் பண்ணுவது. அதோடு தேவாவின் கச்சேரி புரோகிராம்களை நடத்திக் கொடுப்பது.
இந்த சம்பத்தின் மகன்தான் நடிகர் ஜெய். தேவாவுக்கு படங்கள் குறைந்த பிறகு சம்பத்துக்கு வருமானமில்லாமல்போனது. அதே சமயம் அவரது மகன் ஜெய் முன்னணி ஹீரோவாக உருவெடுத்தார். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பதுபோல், தேவா மூலம் கிடைத்த வருமானம் இல்லாமல்போன நேரத்தில் ஜெய் கோடிக்கணக்கில் சம்பாதிக்க ஆரம்பித்ததை எண்ணி மகிழ்ந்தார் சம்பத். நேற்று வரை டூவீலரில் வந்து கொண்டிருந்த சம்பத், இப்போது பி.எம்.டபிள்யூ காரில் செல்கிறார். மகன் ஜெய் அப்பாவுக்குக் கொடுத்த அன்புப்பரிசாம்.