ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இது நம்ம ஆளு படத்தில் கே.பாக்யராஜ் வில்லனாக அறிமுகப்படுத்தியவர் சத்யபிரகாஷ். கோல்மால், சீனாதானா உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தார். இப்போது தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் இவர் தெலுங்கில் வில்லனாக நடித்த அவதாரம் படம் தமிழில் மீண்டும் அம்மன் என்ற பெயரில் வெளிவருகிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு சத்யபிரகாஷ் உருக்கமாக பேசினார்.
அவர் பேசியதாவது: நான் ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை பாக்யராஜ் சார் இது நம்ம ஆளு படத்துல வில்லனாக நடிக்க வச்சார். அவர் அன்று போட்ட பிச்சையில இன்னிக்கு நான் பத்து லாங்குவேஜ் படத்துல நடிக்கிறேன். தெலுங்கு இந்தி, கன்னடம் போஜ்புரி, இங்கிலீஸ், பீகாரின்னு எல்லா மொழியிலேயும் நடிக்கிறேன்.
நான் பீகார்காரனாக இருந்தாலும் எங்க போனாலும், நான் மெட்ராசுன்னுதான் சொல்லுவேன். நான் ஒரு ஹாலிவுட் படத்துல நடிச்சேன். அதோட பிரிமியர் ஷோவுக்கு போனேன். அங்க நான் மெட்ராசுக்காரன்னு சொன்னதும் கட்டிப்புடிச்சிக்கிட்டாங்க. நீங்க மெட்ராசான்னு ஆச்சர்யப்பட்டாங்க. அந்தளவுக்கு இந்த ஊருக்கு பெருமை இருக்கு. எனக்கு அடுத்த ஜென்மம் இருக்கா இல்லியான்னு தெரியாது. ஒரு வேளை இருந்தா இந்த மெட்ராசுல பொறக்கணும், தமிழ் படங்கள்ல நடிக்கணும். அதான் என்னோட ஆசை. கடவுள்கிட்ட அதுக்குத்தான் தினமும் ஃபிரே பண்ணிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் இயக்குனர் கே.பாக்யராஜ், தேனப்பன், பட்டியல் சேகர். ஏஆர்கே.ராஜராஜா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.