இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
கற்றது தமிழ் ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்தில் சிறப்பாக நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை பெற்றுத் திரும்பியிருக்கிறார் சாதனா. இலங்கையை பூர்வீகமாக கொண்ட சாதனா குடும்பம் இப்போது வசிப்பது துபாயில். ஏழரை வயதில் தங்க மீன்கள் படத்தில் நடிக்க தேர்வாகி ஒன்பது வயதில் நடித்தார். இப்போது அவருக்கு வயது 13. தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்தும் நடிக்காமல் துபாய்க்கு படிக்கப்போகிறாராம்.
இதுபற்றி அவர் கூறியதாவது: அப்பாவுக்கு துபாய்லதான் வேலை. அதனால நாங்க எல்லோரும் அங்கதான் குடியிருக்கோம். தங்க மீன்கள் படத்துக்கு குழந்தை நட்சத்திரம் தேடுறாங்கன்னு கேள்விப்பட்டு அந்த ஆடிசன்ல கலந்துகிட்டு நடிச்சு காண்பிச்சேன். நான் செலக்ட் ஆயிட்டேன். ராம் சாரை என்னோட நிஜ அப்பா மாதிரி ஃபீல் பண்ணி நடிச்சேன். அதான் அவ்ளோ சிறப்பா வந்திருக்கு. ஆனா படம் முடிஞ்சு இரண்டு வருஷம் ரிலீசாகாம இருந்தப்போ ரொம்ப சங்கடமாப் போச்சு. பிரண்ட்சுங்கல்லாம் படம் வருமா வராதா? நிஜமாவே படத்துல நடிச்சியா புரூடா விடுறியான்னு கேலி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் ஒருவழியா படம் ரிலீசாச்சு. இப்போ தேசிய விருதும் வாங்கிட்டேன். என்னோட நா.முத்துகுமார் அங்கிள், சதீஷ் அங்கிள், ராம் அங்கிள் எல்லோரும் வாங்கினது சந்தோஷமா இருந்திச்சு.
படம் முடிஞ்சதும் ராம் அங்கிள் இந்த படத்துல உனக்கு நேஷனல் அவார்ட் கிடைக்க நிறைய சான்ஸ் இருக்கு ஆனா ரொம்ப எதிர்பார்க்காத அப்புறம் ஏமாற்றம் வந்திச்சின்னா தாங்க முடியாதுன்னு சொன்னார். அதனால நான் அதைப்பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை. விருது அறிவிச்சப்போ நான் துபாய்ல இருந்தேன். உடனே இந்தியா வரணும்னு ஆசை, முடியல. நிறைய பேர் போன்ல கூப்பிட்டு வாழ்த்து சொன்னப்போ ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு.
தங்க மீன்கள் ரிலீசான பிறகு இரண்டு மூன்று படங்கள்ல நடிக்க கூப்பிட்டாங்க. என்னால நடிக்க முடியல. இப்பவும் நிறைய கூப்பிடுறாங்க. ஆனா இப்போ படிப்புதானே அங்கிள் முக்கியம். நான் 7ம் வகுப்பு படிக்கிறேன். படிப்பெல்லாம் முடிச்சிட்டு திரும்பவும் சினிமாவுக்கு வருவேன். ஆனாலும் எனக்கு நடிக்கிறதை விட டைரக்ட் பண்றதுதான் பிடிக்கும். ராம் அங்கிள்தான் அதுக்கு இன்ஸ்பிரேஷன். இப்பவே நிறைய கதைகள் எழுதி வச்சிருக்கேன். பின்னாடி அதை டைரக்ட் பண்ணுவேன். தேவைப்பட்டால் அப்போ நான் நடிப்பேன்.
தங்க மீன்கள் பார்ட் 2 எடுக்கப்போறதா சதீஷ் அங்கிள் (தயாரிப்பாளர்) சொல்லியிருக்காங்க. அப்படி எடுத்தா அதுல நான் கண்டிப்பா நடிப்பேன். தங்க மீன்கள் மாதிரி நல்ல படம் கிடைச்சா ஸ்கூல் லீவுல வந்து நடிச்சுக் கொடுப்பேன். இப்போ எனக்கு படிப்புதான் முக்கியம் என்கிறார் சாதனா.