‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விபத்து வழக்கில் சல்மானுக்கு எதிராக இரண்டு பேர் அளித்த வாக்குமூலத்தால், அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சல்மான் கான். கடந்த 2002ம் ஆண்டு செப். 28ம் தேதி, குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று 5 பேர் மீது ஏற்றினார். இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து சல்மான் கான் மீது போதையில் கார் ஓட்டியது, கார் ஓட்டி ஒருவரை கொன்றது போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்று(மே 6ம் தேதி) நடந்தது. இதில் சல்மான்கான் தான் காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தியதாக இரண்டு பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன்மூலம் இவ்வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபணம் ஆகி உள்ளதால் சல்மான் கான் சிறை செல்லும் சூழல் உருவாகியுள்ளது.