தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1980களில் தமிழ் சினிமாக்களில் இடைவேளைக்குப்பிறகு ஒரு அசைவ பாடல் இடம்பெறுவது பாணியாக இருந்து வந்தது. அப்போது ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி போன்ற நடிகைகள்தான் அந்த அசைவ பாடல்களில் துக்கடா காஸ்டியூம்களை அணிந்து கொண்டு தியேட்டருக்கு வரும் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் குத்தாட்டம் போட்டு வந்தனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் மேற்படி நடிகைகள் திருமணம் செய்து கொண்டு கரையேறிய பிறகு இப்போது அந்த பணியை கதாநாயகிகளே செவ்வனே செய்து வருகிறார்கள். இதில், அனுராதா திருமணத்திற்கு பிறகு வில்லித்தனமான ரோல்களில் நடிப்பையும் தொடர்ந்து வந்தார். அதோடு தனது வாரிசாக தனது மகள் அபிநயாவையும் அயிட்டம் பாடல்களில் ஆடவிட்டார். ஆனால், அம்மாவின் இடத்தை அபிநயாவினால் நிரப்ப முடியவில்லை. அவரது ஆட்டம் ரசிகர்களை கவராததால் கூடிய சீக்கிரமே பீல்டுஅவுட் ஆகி விட்டார்.
இருப்பினும், தனது வாரிசுகளில் யாரேனும் ஒருவர் கலைச்சேவை ஆற்ற வேண்டும் என்று இப்போது தனது மகன் கெவினை என்ன பிடிச்சிருக்கா என்ற படத்தில் கதாநாயகனாக களமிறங்கி விட்டுள்ளார் அனுராதா. இந்த படத்தில் சிலம்பாட்ட வீரனாக நடிக்கும் மகன் கெவினை எதிர்காலத்தில் பெரிய ஆக்சன் ஹீரோவாக்கி விட வேண்டும் என்பதுதான் அனுராதாவின் தற்போதைய சினிமா கனவாம்.