தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூதுகவ்வும், நேரம், ஜிகிர்தண்டா படங்களில் நடித்த சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் படம் உறுமீன். சக்திவேல் பெருமாள்சாமி என்பவர் இயக்குகிறார். புதுமுகம் ஆராதனா ஹீரோயின். காளி, அனுபமா குமார் உள்பட பலர் நடிக்கிறார்க்ள. அச்சு இசை அமைக்கிறார், ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னை, பாண்டிச்சேரி, கோவை, கேரளா, ஐதராபாத் நகரங்களில் நடந்துள்ளது. தற்போது மீண்டும் சென்னையில் நடக்கிறது. உறுமீன் என்றால் பெரிய மீன் என்று பொருள். 1190 முதல் 2015 வரை நடந்த பல்வேறு பொருளாதார குற்றங்களில் மூலத்தை தேடிக்கண்டுபிடிக்கிற படம். இப்போது கைது செய்யப்படுவது, சிறையில் அடைக்கப்படுவதெல்லாம் சிறிய மீன்கள். இதற்கு காரணமான பெரிய மீன் யார் என்பதுதான் படத்தின் கதையாம். வேகமாக படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. ஆக்ஷன் த்ரில்லர் வகை படம்.