டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெனாலிராமன் மிகப்பெரிய வெற்றியடையும், உடனே தான் கதாநாயகனாக நடிக்கும் அடுத்தப்படத்தைத் தொடங்கிவிடலாம் என்ற திட்டத்தில் இருந்தார் வடிவேலு. அதற்கு ஏற்றார்போல் சிலரிடம் கதை கேட்டு வந்த வடிவேலு, ஒன்றிரண்டு கதைகளில் திருப்தியடைந்து, அவற்றில் சில மாற்றங்களையும் சொல்லி, கதையை மெருகேற்றும்படி கூறி இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான தெனாலிராமன் படத்தின் ரிசல்ட் அவரது திட்டத்தை தவிடுபொடியாக்கிவிட்டது. தெனாலிராமன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது மட்டுமல்ல, மிகப்பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்திவிட்டது, எனவே வடிவேலுவின் திட்டம் நிறைவேறாமல்போனது ஒரு பக்கம் இருக்க, அவரை வைத்து படம் தயாரிக்கலாம் என்ற நினைப்பில் இருந்தவர்களையும் பின்வாங்கச் செய்துவிட்டது.
இன்னொரு பக்கம் தெனாலிராமன் தோல்வி தொடர்பாக வடிவேலுவுக்கும், அப்படத்தின் இயக்குநர் யுவராஜுக்கும் மனவருத்தம் ஏற்பட்டிருக்கிறதாம். கதை,காட்சிகள், வசனம் என எல்லாவற்றிலும் வடிவேலு தலையிட்டதே தெனாலிராமன் படத்தின் தோலில்விக்குக்காரணம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறாராம் யுவராஜ். இந்த விஷயத்தை யாரோ வடிவேலுவின் காதில் ஓதிவிட்டனர். எனவே யுவராஜ் பேரைச் சொன்னாலே பல்லைக்கடிக்கிறாராம் வடிவேலு.