ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சால்ட் பெப்பர் என்ற மலையாளப்படத்தை தமிழில் உன் சமையல் அறையில் என்ற பெயரில் ரீமேக் செய்து வரும் பிரகாஷ்ராஜ், அடுத்தடுத்து படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். உன் சமையல் அறையில் படத்தை தமிழில் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் தற்போது இயக்கி வருகிறார் பிரகாஷ்ராஜ். விரைவில் படத்தை வெளியிடும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தநிலையில், ஆந்திராவில் அவருக்கு எதிராக கிளம்பிய பிரச்சனை அவரை சோர்வடையச் செய்தது.
தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் ஒரு உதவி இயக்குநரை அவர் தரக்குறைவாக திட்டிவிட்டார் என்ற குற்றச்சாட்டு காரணமாக, தெலுங்குப்படங்களில் பிரகாஷ்ராஜ் இனி நடிக்க முடியாதநிலை ஏற்பட்டது. இது தொடர்பான பஞ்சாயத்தில் பிரகாஷ்ராஜ் நேரத்தை செலவிடவேண்டி வந்ததால் உன் சமையல் அறையில் பட வெளியீட்டு பணிகளில் தேக்கம் ஏற்பட்டது. தற்போது நிலமை சரியாகிவிட்டது. விரைவில் உன் சமையல் அறையில் ரிலீஸ். தொடர்ந்து 3 படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்க இருக்கிறார். அப்படங்களை ராதாமோகன், ஞானவேலு மற்றும் பிரகாஷ்ராஜ் இயக்குகின்றனர்.