துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
பாலாவினால் காமெடியனாக அறிமுகப்படுத்தப்பட்ட கருணாஸ் பல படங்களில் நடித்தாலும் அவரது காமெடி நடிப்பு பேசப்பட்டது ஒன்றிரண்டு படங்களில்தான். ஆனாலும் அவருக்கு காமெடி வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வந்தது. கருணாஸுக்கு பட வாய்ப்புகள் வரிசையாய் வந்ததினால் அவருடைய வசதிவாய்ப்புகள் கூடிப்போனதால் வெளிநாட்டு கார், சொந்த பங்களா, சொந்தப்பட தயாரிப்பு, படங்களை வினியோகம் செய்தல் என கருணாஸின் பொருளாதார நிலை உயர்ந்தது.
அதுமட்டுமல்ல, தனக்குப் பின்னால் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதாகவும் நினைத்துக்கொண்டார் கருணாஸ். அந்த நம்பிக்கையின் காரணமாகவோ என்னவோ, தன்னுடைய இனப்பாசத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தவர் ஜாதி அமைப்பு ஒன்றையும் தொடங்கினார். ஜாதி அமைப்பை தொடங்கிய கருணாஸ் அரசியலில் காலூன்றவும் ஆசைப்பட்டார். அதனால் சினிமாவில் கவனம் செலுத்த மறந்தார். எனவே கைவசம் படமே இல்லாமல் இருக்கிறார். கருணாஸைவிட மிகவும் பின்தங்கியிருந்த கஞ்சா கருப்பு கூட கைவசம் இரண்டு படங்கள் வைத்திருக்கிறார். கருணாஸுக்கோ ஒரு படம் கூட கைவசம் இல்லை. படங்கள் கையில் இல்லாததினால் நரைத்த தாடி வைத்துக்கொண்டு ஓல்டு கெட்டப்பில் இருக்கிறார் கருணாஸ்.