ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 150 நேரடி தமிழ் படங்கள் வெளிவருகிறது. இவற்றில் சுமார் 25 படங்களை மட்டுமே டி.வி.சேனல்கள் தொலைக்காட்சி உரிமத்தை வாங்குகின்றன. ஆனால் மற்ற அனைத்து படங்களின் பாடல்கள், காட்சிகளை ஒளிபரப்பி அதில் கிடைக்கும் விளம்பர வருமானத்தை எடுத்துக் கொள்கின்றன. அதற்கு பதிலாக மக்கள் பார்க்காத இரவு 11 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் படத்தின் டிரைய்லரை ஒளிபரப்புகிறார்கள்.
ஒரு திரைப்படத்தின் மூலம் வரும் வருவாயை அந்த படத்தின் தயாரிப்பாளரை விட தொலைக்காட்சிகளே அதிகம் பெறுகின்றன. இந்த நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க தயாரிப்பாளர் சங்கமே ஒரு தொலைக்காட்சி சேனல் தொடங்க வேண்டும், ரிலீசாகிற அத்தனை படங்களையும் அதில் திரையிட வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தயாரிப்பாளர்களுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த கருத்தை நேற்று நடந்த அப்புச்சி கிராமம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் வெளியிட்டார்.
ஒற்றுமை இல்லை
விழாவில் கேயார் பேசியதாவது: இந்த ஆண்டு இதுவரை 74 நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகி இருக்கிறது. அவற்றில் நல்ல கருத்தோடு எல்லா வகையிலும் நிறைவை தந்த படங்கள் கோலிசோடா, தெகிடி, குக்கூ ஆகிய மூன்று படங்கள் மட்டுமே. மற்ற படங்களின் நிலை என்ன?. 16 வயதினிலே படத்தை தயாரித்த ராஜ்கண்ணுவை சமீபத்தில் சந்தித்தேன். இன்றைய தயாரிப்பாளரிகளின் நிலையை அவர் என்னோடு பகிர்ந்து கொண்டார். இந்த நிலை நீடித்தால் தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றார். இந்த நிலைக்கு சினிமா காரணம் அல்ல, நாம்தான் காரணம். நம்மிடம் ஒற்றுமை இல்லை. வியாபார விழிப்புணர்வு இல்லை.
99 ஆண்டு உரிமை
சினிமாவில் தற்போதைய வருமானத்தில் 80 சதவிகிதம் எலெக்ட்ரானிக் மீடியாவில் இருந்துதான் வருகிறது. 20 சதவிகிதம்தான் தியேட்டரில் இருந்து வருகிறது. ஆனால் டி.வி சேனல்களுக்கு உரிமையை 99 ஆண்டுக்கு எழுதிக் கொடுத்து விடுகிறோம். இது செல்லாது என்று உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்த பின்னரும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை தயாரிப்பாளர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தனி சேனல்
தொலைக்காட்சி மூலமாகவும், கேபிள் டி.விக்கள் மூலமாகவும் பலகோடி ரூபாய் வருமானம் வரும் வாய்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கம் அதனை கவனமாக பரிசீலித்து வருகிறது. தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு தொலைக்காட்சி சேனல் துவங்கும் யோசனையும் இருக்கிறது. அதற்கான சாத்தியகூறுகள் பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்கு இது நிச்சயம் நம்பிக்கையை கொடுக்கும். இவ்வாறு கேயார் பேசினார்.
அப்புச்சி கிராமம் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, ஏ.ஆர்.முருகதாஸ், தங்கசாமி, ஹோசிமின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.