'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இது நம்ம ஆளு, சிவப்பதிகாரம், தடையறத்தாக்க போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ். புற்று நோயால் பாதிக்கப்படட இவர், அதை எதிர்த்து போராடி பூரண குணமடைந்த பின்னர் இப்போது மறுபடியும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் படமில்லாதபோதும், தனது தாய்மொழியான மலையாளத்தில் நூர் வித் லவ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் நூர்ஜகான் என்ற வேடத்தில் நடிக்கும் மம்தா, ஒரு காட்சியில் நாயகி தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பது போன்று காட்சி பண்ணப்பட்டிருந்ததாம். அதனால் அதற்காக ஒரு டூப் நடிகையை ரெடி பண்ணினாராம் இயக்குனர். ஆனால், மம்தாவோ, டூப்பெல்லாம் தேவையில்லை. நானே தென்னை மரத்தில் ஏறி தேங்காயை குலைகுலையாய் வெட்டி சாய்க்கிறேன் பாருங்கள் என்று சொல்லிக்கொண்டு மளமளவென்று மரத்தின் உச்சிக்கு சென்று விட்டாராம்.
இந்த காலத்தில், ஒரு சின்ன சுவற்றில் ஏறி குதிக்கவே டூப் கேட்கும் நடிகைகள், ஒரு கதாநாயகியே தென்னை மரத்தில் ஏறிச்சென்றதைப்பார்த்து டோட்டல் யூனிட்டே ஆச்சர்யத்தில் அசந்து நின்றார்களாம்., ஆனால் அதை எதையும் கண்டு கொள்ளாமல், மரத்தின் உச்சிக்கு சென்ற, மம்தா, தனது கையில் கொண்டு சென்ற அரிவாளை எடுத்து தேங்காய் குலைகளை வெட்டி கீழே சாய்த்தாராம்.
இந்த சேதி கேரளாவில் பரவியதையடுத்து, பல நடிகர்-நடிகைகள் மம்தாவின் துணிச்சலை பாராட்டி வருகிறார்களாம்.