தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எல்லோரும் பயத்துடன் எதிர்பார்த்த அதுவும் நடந்து விட்டது. ஆம் சன்னி லியோன் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினியாகிவிட்டார். கனடா தேசத்தின் நீலப்பட நடிகையான சன்னி லியோன். இந்திய பூர்வீகுடி என்ற ஒரே தகுதியோடு இந்திப் படங்களில் கால் பதித்தார். தமிழ் படத்தில் ஆட்டம் போட்டார். தனியார் நிகழ்ச்சிகளில் கவர்ச்சி ஆட்டம்போட்டு காசு சம்பாதிக்கிறார். அவர் தொடர்பான நீலப்படங்கள் இந்திய இணைய தளங்களில் பரபரப்புடன் பார்க்கப்படுகிறது. இந்தியாவை மையமாக வைத்து செயல்படும் நீலப்பட வெப்சைட்டுகள் சன்னியின் படங்களை முதல் பக்கத்தில் வைத்திருக்கின்றன. பொது நிகழ்ச்சிகளில் குண்டு குண்டான பவுன்சர்களோடு வலம் வந்து அடிக்கடி பரபரப்பு ஏற்றுகிறார். இத்தனைக்கும் இடையில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வேறு ஆகிவிட்டார்.
எம்.டி.வி நடத்தி வரும் ஸ்பிளிட் வில்லா நிகழ்ச்சியை செர்லின் சோப்ரா நடத்தி வந்தார். ஆனால் நிகழ்ச்சி டல் அடிக்கவே செர்லின் நீக்கப்பட்டார். சன்னி லியோன் நடித்த ராகிணி எம்.எம்.எஸ்-2 படம் ஹிட் அடிக்கவே சன்னியின் மார்க்கெட் கணிசமாக உயர்ந்தது. டி.வி நிகழ்ச்சிகளை நடத்த தயார் என்று ஏற்கெனவே சன்னி அறிவித்திருந்தார். இதனால் சன்னியை அணுகியது எம்.டி.வி. இப்போது ஸ்பிளிட் வில்லா நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சன்னி ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார். இதற்காக கணிசமான தொகை அவருக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அடுத்த சில வாரங்களிலிருந்து ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் வரப்போகிறார் சன்னி லியோன். அவரைப் பற்றி முழுவிபரம் தெரிந்து கொள்ள இணையத்தளத்தில் குடும்பத்து ஆண்களும், பெண்களும் தேட ஆரம்பித்தால் இருக்கிறது வில்லங்கம்.