'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஏ.ஆர்.முருகாதசிடம் உதவியாளராக இருந்த வி.ஐ.ஆனந்த் இயக்கி இருக்கும் படம் அப்புச்சி கிராமம். புதுமுகங்கள் பிரவீன் குமார், அனுஷா நடிக்கிறார்கள். இவர்களுடன் சுவாசிகா, சுஜா, கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, ஜோமல்லூரி, ஜி.எம்.குமார் நடிக்கிறார்கள். படத்தின் கதை பற்றி மூச்சுக்கூட விடாத இயக்குனர்கள் மத்தியில் அப்புச்சி கிராமத்தின் முழு கதையையும் தெளிவாக சொல்கிறார் இயக்குனர் வி.ஐ.ஆனந்த்.
"சர்வதேச வின்வெளி ஆய்வு மையம் பூமியை நோக்கி ஆயிரக்கணக்கான எரிகற்கள் வந்து கொண்டிருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். இன்னும் 8 நாட்களில் அது பூமியை தாக்கும். அது தாக்குகிற இடத்தில் புல் பூண்டுகள் கூட தப்பிக்காது. 8 நாளில் கிட்டத்தட்ட உலகின் பெரும் பகுதி அழிந்து விடும் ஆனால் எந்தெந்த பகுதி அழியும், எது தப்பிக்கும் என்று தெரியாது.
இந்த செய்தி உலகம் முழுவதும் பரவுகிறது. அப்புச்சி என்னும் கிராமத்துக்கும் செய்தி வந்து சேர்கிறது. பல்வேறு தரப்பட்ட வெள்ளிந்திரியான மக்கள் வாழும் கிராமம் அப்புச்சி கிராமம். 8 நாளில் நாம் சாகப்போகிறோம் என்று கருதும் அந்த மக்களின் மனநிலையில் என்ன மாற்றம் நிகழ்கிறது. 8 நாட்களில் அவர்கள் தங்களை எப்படி மாற்றிக் கொள்கிறார்கள். கடனை கேட்டு நச்சரித்தவன் வேண்டாம்னே அப்புறம் பார்த்துக்கலாம் என்பான். காதலை மறுத்துக் கொண்டிருந்தவள் காதலிக்க ஆரம்பிக்கிறாள். கஞ்சனாக இருந்தவன் வள்ளலாக மாறுகிறான். இப்படி பல மாற்றங்கள் அவர்களுக்குள் நடக்கிறது. உலகம் அழியும் ஒரு நாளைக்கு முன்பே ஊரே கூடி திருவிழா கொண்டாடுகிறார்கள். ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். பகைகள் உறவாக மாறுகிறது. அடக்கி வைத்திருக்கும் அன்பு உடைத்து கிளம்புகிறது. பூக்காத காதல்கள் பூத்து குலுங்குகிறது.
மறுநாள் அவர்கள் எதிர்பார்த்த மாதிரி உலகம் அழியவில்லை, கடந்த 8 நாட்கள் வாழ்ந்த அந்த அற்புதமான வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை என்தை உணர்ந்து அது போலவே தொடர்ந்து வாழ முடிவு செய்கிறார்கள்.
இது சயின்ஸ்பிக்சன் கற்பனை கதை என்பதை விட மனிதநேயத்தை சொல்கிற படம். காமெடி, காதல், செண்டிமெண்ட் எல்லாமே கலந்திருக்கிற படம். மீரா கிருஷ்ணனின் ஒரே மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறான். 8 நாளில் அவனும் சாகப்போகிறான். இவளும் சாகப்போகிறாள். மகனின் குரலையாவது அதற்குள் கேட்டுவிட மாட்டோமா என்கிற ஒரு தாயின் தவிப்பை இதில் காட்டுகிறோம். இது ஒரு சின்ன சாம்பிள்தான். 3 காதல் கதைகள் இருக்கிறது. படத்தின் ஹீரோ பூமியை நோக்கி வரும் எரிகல், வில்லன் அந்த 8 நாட்கள் மற்றவர்கள் வாழும் கதாபாத்திரங்கள். இது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்" என்கிறார் ஆனந்த்.