இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் புதிய படம் லிங்கா. இதில் அவருடன் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். ரஜினியின் நண்பர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த 2ந் தேதி மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் தொடங்கியது. கர்நாடக வீட்டுவசதித்துறை அமைச்சரும், நடிகருமான அம்ரிஷ் தொடங்கி வைத்தார்.
40 நாள் படப்பிடிப்பு
பூஜையைத் தொடர்ந்து மைசூரில் உள்ள அரண்மணை மற்றும் அங்கு போடப்பட்டுள்ள ஷெட்டுகளில் தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்த 20 நாட்கள் ராம்நகர், மாண்டியா, மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் செய்துள்ளார்.
சோனாக்ஷி சின்ஹா
முதல்கட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். இதற்காக அவர் மைசூர் வந்தார். நேற்று (மே 3) படப்பிடிப்புக்கு வந்த அவர் ரஜினியின் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்று விட்டு மேக்அப் போட்டு ரஜினியுடன் நடித்தார்.
எதிர்ப்பு
இந்த நிலையில் லிங்கா படத்தின் படப்பிடிப்பை கர்நாடக மாநிலத்தில் நடத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. காவிரி பிரச்னையில் ரஜினி தமிழ்நாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாலும், காவிரி பிரச்னை போராட்டத்தில் கலந்து கொண்டதாலும் அவரின் படப்பிடிப்புகளை இங்கு நடத்த விடமாட்டோம் என்று சில கர்நாடக அமைப்புகள் அறிவித்திருக்கிறது. நேற்று ராம்நகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கஸ்தூரி கர்நாடக ஜனபிரவேதிகே என்ற அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரஜினி உருவ பொம்மை எரிப்பு
இந்த ஆர்ப்பாட்டத்தில் ரஜினியின் உருவ பொம்மையை எரித்தனர். ரஜினிக்கு எதிராகவும், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார். அதனை போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த ரமேஷ் கவுடா பேசியதாவது: தன்னை கன்னடர் என்று சொல்லிக் கொள்ளும் ரஜினி கன்னட மக்களுக்காக எதையும் செய்ததில்லை. எங்களுக்கு எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. எதிர்ப்பாவது செய்யாமல் இருக்கலாமே. காவிரி பிரச்னையில் கர்நாடகாவையும், 6 கோடி கன்னடர்களையும் கடுமையாக தாக்கி பேசினார். காவேரி, ஒக்கேனக்கல் பிரச்னைகளில் கர்நாடகாவுக்கு எதிராக நிற்கிறார். இதனால் ரஜினியின் படப்பிடிப்பை கர்நாடகாவின் எந்த ஒரு இடத்திலும் நடத்த விட மாட்டோம். மீறி நடத்தினால் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
போலீஸ் பாதுகாப்பு
படப்பிடிப்புக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து மைசூரில் நடந்து வரும் லிங்கா படப்பிடிப்பிற்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், என்றாலும் தொடர்ந்து இங்கு படப்பிடிப்பபை நடத்துவதில் அவர் உறுதியாக இருப்பதாகவும் தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.