பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கோலிவுட்டில் சிம்புவுக்கு நண்பர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, ஆந்திராவில் சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் நடிகர் மகத் குறிப்பிடத்தக்கவர். ஆந்திரா சென்றால் இவரைத்தான் முதல்வேளையாக சந்திப்பார் சிம்பு. அதேபோல் மகத் சென்னை வந்தால் சிம்புவைதான் சந்திப்பார். அந்த அளவுக்கு இருவரும் உயிருக்கு உயிரான நண்பர்கள்.
அதனால்தான், தான் நடித்த வல்லவன், காளை ஆகிய படங்களில் மகத்தை சிறிய வேடங்களில நடிக்க வைத்தார் சிம்பு. அதுதவிர மங்காத்தா, ஜில்லா போன்ற படங்களில் நடித்துள்ள மகத், தற்போது சிம்பு என்ற பெயரில் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார். சிம்பு தனது நண்பன் என்பதால் அவருடைய பெயரிலேயே இந்த படத்தில் மகத்தின் கேரக்டர் சித்தரிக்கப்பட்டுள்ளதாம்.
அதனால், இதற்கு சிம்பு என்பதுதான் சரியான டைட்டீல் என்று வைத்து விட்டாராம் மகத். அதோடு நிற்கவில்லை, சிம்பு என்று படத்துக்கு பெயர் வைத்து விட்டு, நிஜமான சிம்பு படத்தில் நடிக்காமல் இருந்தால் எப்படி? தனது எண்ணத்தை அவர் சிம்புவிடம் சொல்ல, நீ என்ன கேரக்டரில் நடிக்க சொன்னாலும் நான் ரெடி என்று சம்மதம் சொல்லியிருக்கிறார் சிம்பு. மேலும், இப்படம் தெலுங்கில் ஹிட்டடித்தால் ஒருவேளை தமிழுக்கு வருவதற்கும் வாய்ப்பிருக்கிறதாம்.