'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு |
சென்னையை சேர்ந்த டிரம்ஸ் இசை கலைஞர் சிவமணி டிரம்ஸில் உலகில் சிறந்த இசை கலைஞராக திகழ்கிறார். உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதுவரை சுமார் ஆயிரம் படங்களுக்கு டிரம்ஸ் வாசித்துள்ளார். தற்போது அரிமா நம்பி என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளார். சிவமணியை கவுரவிக்கும் விதமாக சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆயிரம் டிரம்ஸ் கலைஞர்கள் இணைந்து ஒரே நேரத்தில் 11 நிமிடம் டிரம்ஸ் இசைத்தனர். அவர்களுடன் சிவமணியும் டிரம்ஸ் வாசித்தார். இது உலக கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்பட உள்ளது. தற்போது பாரத் புக் ஆஃப் ரிக்கார்ட்சில் இடம் பெற்றிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, கடம் வித்வான் விநாயக்ராம், நாதஸ்வர வித்வான் பழனிவேல், இசை அமைப்பாளர்கள் சபேஷ் முரளி, சத்யா, தஷி, பாடகர்கள் கானா பாலா, வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் செய்திருந்தது.