இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் நடிகை ரோஜா ஆந்திராவில் அரசியல் செய்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலுடன் இணைந்து ஆந்திர சட்டமன்றத்திற்கு நடக்கும் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கெனவே இதே தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற ரோஜா இந்த முறை எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று (மே 2) நகரியை அடுத்த சந்திரவாடாவில் கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம் செய்தார். இது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் வீடுவீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். கடும் வெயிலை தாங்க முடியாத ரோஜா தெருவில் நடந்து செல்லும்போதே மயங்கி விழுந்தார். உடனே கட்சி நிர்வாகிகள் அவரை அருகில் உள்ள ஒரு வீட்டிற்குள் தூக்கிச் சென்று படுக்க வைத்துவிட்டு டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தனர். வெயிலின் கொடுமை காரணமாக உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அவர் மயங்கி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதற்கான சிகிச்சையை பெற்றுகொண்ட ரோஜா. 3 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தனது பிரச்சாரத்தை துவக்கினார்.
வெயில் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்த ரோஜாவின் சின்னம் மின் விசிறி.