இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தென்றல் தொடரில் தமிழ் என்ற கேரக்டரில் நடித்து வருகிறவர் தீபக். தொடரின் மூலம் நல்ல பெயரை பெற்றிருக்கும் தீபக்கை அவரது நண்பர்கள் சினிமா ஹீரோவாக்கி விட்டார்கள். தீபக்கின் நெருங்கிய நண்பர்களான வெங்கட்ராஜ், எஸ்.என்.சக்திவேல் ஆகியோர் இணைந்து இவனுக்கு தண்ணியில கண்டம் என்று ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் தீபக்தான் ஹீரோ. சத்தமே இல்லாமல் 50 சதவிகித படப்பிடிப்பை முடித்து விட்டார்கள். சில பாடல் காட்சிகளும், கிளைமாக்ஸ் காட்சிகளும் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது. புதுமுகம் நேகா என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார். சக்தி வேல் என்பவர் இயக்குகிறார்.
"படத்துல நான் ஹீரோவெல்லாம் கிடையாது. கதையின் நாயகன்னு சொல்லலாம். பக்கத்து வீட்டில் உள்ள ஒரு சாதாரண இளைஞனைப்போல நடித்திருக்கிறேன். முழு நீள காமெடி ஸ்கிரிபிட்" என்கிறார் தீபக்.