டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நான் ஈ படத்தை அடுத்து, கெளதம்மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்தார் சமந்தா. ஆனால், அந்த படம் வெற்றி பெறவில்லை. அதனால், அந்த சமயத்தில் சமந்தாவுடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை எந்த கோலிவுட் ஹீரோக்களுக்கும் ஏற்படவில்லை. அதேசமயம் அதே படம் தெலுங்கில் மெகா ஹிட்டானது. அதனால், தொடர்ந்து ஆந்திராவின் ராசியான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டு வருகிறார் சமந்தா.
இந்த நிலையில், சமந்தாவின் தெலுங்கு மார்க்கெட்டை கருத்தில் கொண்டு சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடிப்பதற்காக லிங்குசாமி புக் பண்ணியதை அடுத்து, இப்போது விஜய்யைக்கொண்டு தான் இயக்கும் கத்தி படத்திற்காகவும் சமந்தாவையே புக் பண்ணியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆக ஒரே நேரத்தில் இரண்டு மெகா ஹீரோக்களின் படங்களில் நடிப்பதால், அடுத்து தமிழில் சமந்தாவுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்பதை இப்போதே உணர்த்தி விட்டது. அதோடு நடித்து வரும் படங்களில் அதிரடி கிளாமராக நடித்தும் கலக்கி எடுத்திருக்கிறாராம் சமந்தா.
அதன்காரணமாக கோலிவுட்டிலுள்ள மேலும் சில முன்னணி ஹீரோக்களுக்கும் சமந்தாவுடன் ஜோடி சேரும் ஆசை மேலோங்கி நிற்கிறது. அதில் ஆர்யா, விஷால் போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால், அவர்கள் இன்னும் அது சம்பந்தமாக சமந்தாவை அணுகவில்லை. அதேசமயம், தற்போது 'ஐ' படத்தில் எமிஜாக்சனுடன் டூயட் பாடிவிட்டு வந்திருக்கும் விக்ரம், விஜய்மில்டன் இயக்கத்தில் தான் நடிக்கும் புதிய படத்திற்கு சமந்தாவை புக் பண்ணுமாறு கூறியுள்ளார். ஆக, சமந்தாவின் கோலிவுட் பட பட்டியலில் இன்னும் வேகமாக வளரும் என்று தெரிகிறது.