தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யா. தந்தையின் நடிப்பில் உருவாக்கி உள்ள அனிமேஷன் படம் கோச்சடையான். இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே விருதுகளை பெறத் தொடங்கிவிட்டது. என்டிடிவி நிறுவனம் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2013ம் ஆண்டுக்கான சாதனையாளர் விருது வழங்கும் விழா டில்லியில் நேற்று (ஏப்ரல் 29) நடந்தது.
இதில் சவுந்தர்யா ரஜினிகாந்த், தொழில்நுட்பத்தில் சிறந்த இந்தியர் என்ற விருதினை பெற்றார். இதனை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் வழங்கினார். அப்போது லதா ரஜினி காந்த் உடன் இருந்தார். விருதை பெற்றக் கொண்ட சவுந்தர்யா "அனிமேஷன் கார்ட்டூன் ஆகாது. கோச்சடையான் கார்டூன் படம் அல்ல அனிமேஷன் படம். கடுமையான உழைப்பின் மூலம் கோச்சடையான் உருவாகி உள்ளது" என்றார். "அனிமேஷன் மூலம் இனி எல்லாம் சாத்தியம். எந்த நடிகரையும் நாம் அனிமேஷன் மூலம் மறு உருவாக்கம் செய்ய முடியும்" என்றார் ரன்பீர் கபூர்.