ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படத்தை, பல மாதங்களுக்கு முன்பே வெளியிட இருந்தனர். ஆனால், படம் எதிர்பார்த்தபடி விற்பனை ஆகவில்லை. அனிமேஷன் படம் என்பதால் விநியோகஸ்தர்கள் வாங்க தயங்கி நின்றனர். அதையடுத்து, இன்னும் படத்தை வைத்துக்கொண்டிருந்தால் அதற்கான வேல்யூ குறைந்து விடும் என்பதால், அதையடுத்து வந்த வரைக்கும் லாபம் என்ற கணக்கில் படத்தை விற்று விட்டனர்.
அதோடு, தனது முந்தைய படங்களை விட இந்த படத்திற்கு ரஜினியே முன்வந்து பப்ளிசிட்டி செய்தார். முதலில் சென்னையில் நடந்த ஆடியோ விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், அதையடுத்து, மும்பை, ஐதராபாத்திலும் படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார். அப்போது மும்பையில் நடந்தபோது அமிதாப்பச்சன் உள்ளிட்ட அங்குள்ள பாலிவுட் பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் ஐதராபாத்தில் நடந்தபோது தெலுங்குப்பட டைரக்டர்கள், ஹீரோக்கள் என ஒரு பெருங்கூட்டமே கலந்து கொண்டு ரஜினி படத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். ஆக, மிகப்பெரிய விளம்பர யுக்திகளுடன் மே 9-ந்தேதி ரசிகர்களை சந்திக்க தயாராகி விட்டார் கோச்சடையான்.
இந்த நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, படையப்பா படங்களைப்போன்று அடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் லிங்கா பட வேலைகளும் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. மே 2-ம் தேதி மைசூரில் இதன் படப்பிடிப்பை தொடங்கி 40 நாட்கள் அங்கே முகாமிட்டு படப்பிடிப்பு நடத்துகிறார்கள்.
இப்படத்திற்கான டைட்டீல் தேர்வு கடந்த சில மாதங்களாகவே ரஜினி வட்டாரங்களில் ஓடிக்கொண்டிருந்தது. அப்படி பல டைட்டீல்கள் தேர்வு செய்தும் அவை ரஜினிக்கு பிடிக்காததால, இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருந்தது. ஆனால், ஒருநாள் திடீரென்று லிங்கா என்ற பெயரை வைக்கலாம் என்று சொன்னாராம் ரஜினி. லிங்கா தனது மூத்த மகள் ஐஸ்வர்யா மகனின் பெயர் என்பதோடு, தனக்கு அந்த பெயர் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆகும் என்று ரஜினி கருதியதை அடுத்து லிங்கா என்ற டைட்டீலை ஒருமனதாக கே.எஸ்.ரவிக்குமார் தரப்பும் உறுதி செய்திருக்கிறது.
முன்னதாக, தனது மகன் லிங்காவின் டைட்டீலில் தான் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று சேம்பரில் பதிவு செய்து வைத்திருந்தாராம் தனுஷ். ஆனால் மாமனார், பேரனின் பெயரில் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுவதை அறிந்த தனுஷ், ஏற்கனவே நான் இந்த டைட்டீலை பதிவு செய்து வைத்திருக்கிறேன. நீங்கள் வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று மாமனாருக்காக லிங்கா டைட்டீலை விட்டுக்கொடுத்தாராம் தனுஷ்.