பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்து வந்தபோதே, பாண்டிராஜ் இயக்கும் 'இது நம்ம ஆளு' படத்திலும் கமிட்டானார் சிம்பு. அதோடு அப்படத்தை தானே தயாரிக்க ஒத்துக்கொண்டவர், தனது தம்பி குறளரசனையும் அப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்கிறார். மேலும், இந்த படத்திற்கு கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று பரிசீலனை செய்த பாண்டிராஜ், நயன்தாராவை மீண்டும் சிம்புவுடன் இணைத்தால் படத்திற்கு நல்ல பப்ளிசிட்டி கிடைக்கும் என்று வியாபாரத்தனமாக யோசித்து அவரையும் ஒருவழியாக பேசி நம்மதிக்க வைத்தார். இதனால் அதுவரை சத்தமில்லாமல் இருந்த அந்த படம் அதையடுத்து பரபரப்பான படமாகியது.
இருப்பினும், முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தநிலையில், பின்னர் வாலு, சட்டென்று மாறுது வானிலை படங்களிலும் மூக்கை நுழைத்த சிம்பு, இது நம்ம ஆளு படத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். அதோடு, அப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வரும் டைரக்டர் பாண்டிராஜ்க்கும் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கவிலலையாம்.
இதனால், படத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்க, இப்போது தனது தரப்பில் இருந்தே அந்த பணத்தை கொடுத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளாராம். ஆனால், அப்படி அவர் கொடுத்த பணத்தையும் இன்னமும் சிம்பு தரப்பு கொடுத்தபாடில்லையாம். ஆக, பெரிய நடிகரை வைத்து படம் இயக்க வேண்டும் என்று களத்தில் இறங்கி பெரிய சிக்கலில் சிக்கியிருக்கிறார் பாண்டிராஜ்.