புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
விஷால் நடித்த பாண்டியநாடு படத்தில் அவரது அப்பா வேடத்தில் நடித்திருந்தார் பாரதிராஜா. பாண்டியநாடு படம் வெளி வந்தபோது படத்தைப் பார்த்தவர்கள், சூப்பரா நடிச்சிருக்கீங்க ஸார் என்று பாரதிராஜாவிடம் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதுதான் இப்போது தப்பாகிவிட்டது. ஏன்..என்னாச்சு? நாமும் கதாநாயகனாக நடித்தால் என்ன? என்ற விபரீத ஆசை பாரதிராஜாவுக்கு ஏற்பட்டுவிட்டது. தன் ஆசையை தன் உதவியாளர்களிடம் அவர் முதலில் சொன்னபோது விளையாட்டாக சொல்கிறார் என்றே நினைத்திருக்கின்றனர். பிறகுதான் தெரிந்திருக்கிறது..அவர் சொல்வது விளையாட்டு அல்ல, சீரியஸ் என்று..
தன் ஆசையை சொன்னது மட்டுமல்ல, சூட்டோடு சூடாக உடனடியாய் உட்கார்ந்து தனக்கான கதையையும் தயார் செய்யும்படி தன் உதவியாளர்களிடம் சொல்லி இருக்கிறார் பாரதிராஜா. கதையின் அவுட்லைன் ஓரளவு ரெடியானதும், அந்தப் படத்தை தானே இயக்கி ஹீரோவாக நடிப்பது என்று முதலில் தீர்மானித்தாராம். பிறகு என்ன நினைத்தாரோ தானே இயக்குவது என்ற முடிவை பிறகு மாற்றிக் கொண்டு, அமீர், வெற்றிமாறன் போன்ற முன்னணி இளம் இயக்குநர்களை அணுகி தன்னை வைத்து படம் பண்ணும்படி கேட்டிருக்கிறார்.
எனக்கு அந்த ஹீரோ டேட் இருக்கு, இந்த ஹீரோ டேட் இருக்கு என்று வாயில் வந்த பெயர்களை எல்லாம் சொல்லிவிட்டு ஓட்டம் எடுத்திருக்கின்றனர். எனவே தன்னிடம் உதவியாளராக இருந்து இயக்குநரான சிலரது பெயர்களை டிக் பண்ணி அவர்களில் ஒருவரை இயக்குநராக செலக்ட் பண்ணப்போகிறாராம்.