ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
தமிழில், மாதவன் நடித்த யாவரும் நலம், சிம்பு நடித்த அலை ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம் கே.குமார். இவர் தற்போது தெலுங்கில் மனம் என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா, அவரது மகன் நாக சைதன்யா என ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று பேர் தாத்தா, மகன், பேரன் என முக்கிய வேடங்களில் நடித்தனர்.
ஆனால் நாகேஸ்வரராவ் தனக்கான காட்சிகளில் நடித்து முடித்தபோது புற்று நோயின் தாக்கத்துக்கு ஆளானார். ஆனபோதும், தன் படுக்கையில் இருந்தபடியே தன்னை டப்பிங் தியேட்டருக்கு கொண்டு செல்ல வைத்து தனக்கான டப்பிங்கையும் பேசி முடித்தார். அதன்பிறகு சில நாட்களிலேயே அவர் இறந்து விட்டார்.
அதையடுத்து, அப்படத்தின் படப்பிடிப்பு சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள். தனது தந்தை நடித்த கடைசி படம் என்பதால் இதை இந்தியா முழுக்க வெளியிட திட்டமிட்டுள்ள நாகார்ஜூனா, ஏற்கனவே ஸ்ரேயா, சமந்தா போன்ற நடிகைகள் நடித்திருக்கும் நிலையில், இன்னொரு இந்தி பிரபலமும் இருந்தால் இந்தியில் வெளியிட ஏதுவாக இருக்கும் என்று அமிதாப்பச்சனிடம் பேசியுள்ளார். அவர் சிறப்பு தோற்றத்தில் வந்தாலும், அவரது வேடம் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.