ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் இயக்கத்தில், விஜய் நடித்த தலைவா படத்தில் நடிக்கத் தொடங்கியபோது, அந்த படத்திற்கு தலைவன் என்றுதான் பெயர் வைத்தனர். ஆனால், திடீரென்று அந்த டைட்டில் எங்களுக்கு சொந்தமானது. நாங்கள் ஏற்கனவே அந்த பெயரை எங்கள் படத்துக்கு பதிவு செய்து வைத்து விட்டோம் என்று சமீபத்தில் வெளியான தலைவன் படத்தில் நாயகனாக நடித்துள்ள பாஸ்கரன் கொடி பிடித்தார்.
அதையடுத்து, ஏற்கனவே துப்பாக்கி படத்தில் நடித்தபோது கள்ளத்துப்பாக்கி கம்பெனியுடன் டைட்டீல் பிரச்னையால் அல்லோல்பட்டு வந்திருந்த விஜய், திரும்பவும் டைட்டில் பிரச்னை என்றதும் டென்சனாகி விட்டார். அதனால், தலைவன் நமக்கு வேண்டாம். அதில் ஏதாவது மாற்றம் செய்யுங்கள் என்று டைரக்டர் விஜய்யிடம் சொன்னதையடுத்து தலைவா என்று டைட்டில் திருத்தம் செய்தார்.
அதன்பிறகு, தலைவா அதையடுத்து ஜில்லா போன்ற படங்களில் விஜய் நடித்து அவை வெளியாகி விட்டன. இப்போது கத்தியில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில்தான் தலைவன் படம் திரைக்கு வந்ததுள்ளது அதோடு, ஓரிரு நாட்களிலேயே தியேட்டர்களை விட்டு மாரத்தான் ஓட்டம் பிடித்து விட்டது.
ஆனால், அந்த படத்தில் பணியாற்றிய பெப்சி தொழிலாளர்களுக்கு சம்பளத்தை இன்னமும் செட்டில் பண்ண வில்லையாம். படம் ரிலீசாவதற்கு முந்தின நாளே, இந்த பிரச்னை பெப்சிக்கு சென்று பஞ்சாயத்து நடந்தது. அதையடுத்து, பெப்சி தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய கிட்டத்தட்ட 7 லட்சம் ரூபாயை மே 10-ந்தேதி கொடுத்து விடுவதாக கூறியுள்ளாராம் பாஸ்கரன். அதை அவர்கள் ஏற்க மறுத்ததையடுத்து, அதற்கான காசோலையை பெப்சி அமைப்பிடம் கொடுத்திருக்கிறாராம். அதனால் தலைவன் படத்தில் வேலை செய்த பெப்சி தொழிலாளர்கள் மே 10-ந்தேதியை எதிர்நோக்கி உள்ளனர்.