சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், குணசித்திர நடிகர் என பல முகங்களை கொண்ட நடிகர்களில் ஆனந்த்ராஜூம் ஒருவர். 1987ல் தாய் மேல் ஆணை என்ற படத்தில் அறிமுகமான இவர், அதையடுத்து என் தங்கச்சி படிச்சவ, புலன் விசாரணை, மாநகர காவல், நாட்டாமை, பாட்ஷா என பல படங்களில் அதிரடி வில்லனாக தன்னை வெளிப்படுத்தியவர்.
ஆனால், தமிழ் சினிமாவுக்குள் சில புதிய வில்லன் நடிகர்களின் வரவுக்கு பிறகு ஆனந்தராஜின் மார்க்கெட் சரிந்தது. அதனால், அவ்வப்போது கிடைக்கிற வேடங்களில் நடித்து வரும் அவர், தற்போது விஷ்ணு நாயகனாக நடித்துள்ள முண்டாசுப்பட்டி என்ற படத்தில் ஒரு ஜமீன்தார் வேடத்தில் நடித்திருக்கிறார்.
1980 காலகட்டத்தில் வாழும் ஜமீன்தார் என்றபோது ஆனந்தராஜ்தான் என் கண்முன்னே தோன்றினார் என்று சொல்லும் அப்படத்தின் டைரக்டர் ராம்குமார், இப்படத்தில் நடிக்க ஸ்பாட்டுக்கு வந்தபோது, நான் சொன்ன வசனங்கள் மட்டுமின்றி, அவரே எந்த கேரக்டருக்குத் தேவையான மேலும் சில டயலாக்குகளையும் பில்லப் பண்ணிக்கொண்டு நடித்தார்.
அதுமட்டுமின்றி, அந்த கேரக்டரில் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று அவரிடம் எதுவும் சொல்லவில்லை. ஜமீன்தார் வேடம் என்பதை மட்டும்தான் சொன்னேன், அதையடுத்து அவராக ஜமீன்தாராக தன்னை மாற்றிக்கொண்டு நடித்தார். ஜமீன்தார்கள் எப்படி உட்காருவார்கள், எப்படி பேசுவார்கள், எப்படி நடப்பார்கள் என அனைத்தும் அவருக்கு அத்துபடியாக இருந்ததால், அந்த கேரக்டர் ரொம்ப அற்புதமாக வந்திருக்கிறது என்கிறார் டைரக்டர் ராம்குமார்.