ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதுமுக இயக்குநர்களின் படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகை நந்திதா, இனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன் என்று கூறியுள்ளார். 'அட்டகத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. தொடர்ந்து 'எதிர்நீச்சல்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து பெயர் பெற்றார். இதுதவிர 'நளனும் நந்தினியும்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டார். இப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. இதுதவிர மூன்று புதிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் அனைத்துமே புதுமுக இயக்குநர்கள் இயக்கிய படங்கள் தான்.
தொடர்ந்து புதுமுகங்களின் படங்களில் நடிப்பது பற்றி நடிகை நந்திதாவிடம் கேட்டபோது, இப்போது வரும் புதுமுக இயக்குநர்கள் எல்லாம் நிறைய திறமையோடு, நல்ல கதையம்சத்துடனும் படம் எடுக்கிறார்கள். சமீபகாலமாக வித்தியாசமான படங்கள் தான் மக்களிடமும் வெற்றி பெறுகிறது. மேலும் இதுபோன்ற படங்கள் எனக்கும் ஏற்றமாதிரி இருப்பதால் நானும் புதுமுக இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமையும் என்றால், இனி நானும் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிப்பேன் என்கிறார்.