ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மம்முட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம் உள்பட முன்னணி மலையாள ஹீரோக்களை வைத்து 39 படங்களை இயக்கிய மலையாள இயக்குனர் அனில் குமார், கலியுஞ்சால், குடும்ப விசேஷம், பட்டாபிஷேகம், பார்த்தன் கண்ட பரலோகம், மாந்த்ரீகம், க்ளைமாக்ஸ் போன்றவை முக்கியமான படங்கள். தற்போது தமிழில், சேர்ந்து போலாமா என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விநய், மதுரிமா, ப்ரீத்தி பால் நடிக்கிறார்கள். மலையாளப் படத்தை விட்டுவிட்டு ஏன் தமிழ் எடுக்க வந்திருக்கீங்க என்ற ஒரு கேள்விக்கு தன் ஆதங்கத்தை கொட்டினார் அனில் குமார்.
அவர் கூறியதாவது, "20 வருடமாக மலையாள சினிமாவில் இருக்கிறேன். முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி இருக்கிறேன். முன்பு மலையாள சினிமாவில் கதைக்கு முக்கியத்தும் இருந்தது. மலையாள சினிமாவிற்கென்று ஒரு தரம் இருந்தது. மலையாள சினிமாவில் ஒரு அழகியல் இருந்தது. இப்போது மலையாள சினிமா கெட்டுப் போய்விட்டது. எல்லாமே வியாபாரமாகி விட்டது. ஹீரோக்களின் ராஜ்யம் நடக்கிறது. கதையை பார்த்து நடிக்காமல் தனக்கு சலாம் போடும் இயக்குனர்களை வைத்து ஹீரோக்கள் நடிக்கிறார்கள். இப்போது ஹீரோக்களுக்காக கதை உருவாக்கப்படுகிறதே தவிர, கதைக்கேற்ற ஹீரோக்களை யாரும் தேடுவதில்லை. எனக்கு நடிகருக்காக கதை பண்ணத் தெரியாது. அதனால் மலையாள சினிமாவில் இருந்து விலகி விட்டேன். கடைசியாக சில்க் சுமிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து க்ளைமாக்ஸ் படத்தை எடுத்தேன்.
தமிழ் ரசிகர்கள் நல்ல படங்களை ஆதரிக்கிறார்கள். புதிய முயற்சிகள் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. டெக்னீஷியன்களுக்கு மரியாதை இருக்கிறது. அதனால் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறேன்" என்கிறார் அனில் குமார்.