டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை சுஜிபாலா தன்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பி.ரவிகுமார் மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார். ரவிகுமார் தன்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்துவதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார். சுஜிபாலாவை தான் முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாகவும், அவரது தவறான தொடர்புகளை கண்டித்ததால் பொய் புகார் கொடுத்திருப்பதாகவும் ரவிகுமார் கூறியிருந்தார்.
இந்தநிலையில் சுஜிபாலாவை வடபழனி போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். அதன்படி நேற்று (ஏப்ரல் 27) மாலை சுஜிபாலா தனது தாயார் மற்றும் வழக்கறிஞருடன் வடபழனி போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் இரவு 7 மணிவரை விசாரணை நடத்தினர். வடபழனி போலீஸ் நிலையம் முன்பு நிறைய போலீஸ் வாகனங்கள் நிற்பதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.
சுஜிபாலாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அவரது வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவிகுமாரிடமும் விசாரணை நடத்திய பிறகே வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.