மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தென்னிந்திய சினிமாவின் மூத்த அமைப்பான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு நேற்று (ஏப்ரல் 27) தேர்தல் நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை, சேம்பர் அவமதிப்பதாகவும், சேம்பரில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் கூறி இந்த முறை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தேர்தலை புறக்கணித்தது. 2088 வாக்குகளை கொண்ட சேம்பரில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வாக்கு 837. தயாரிப்பாளர் சங்கத்தின் புறக்கணிப்பால் சேம்பரின் முன்னாள் தலைவர் கல்யாணின் ஆதரவோடு நின்றவர்கள் எளிதாக வெற்றி பெற்றார்கள். 1140 பேர் நேற்று வாக்களித்தனர். பின்னர் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
தலைவராக கேரளாவைச் சேர்ந்த சசிகுமார் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட செவன்த் ஸ்டார் விஜயகுமார் தோல்வி அடைந்தார். செயலாளர்களாக அருள்பதி, காட்ரகட்ட பிரசாத், ஆகியோரும் பொருளாளராக கே.முரளிதரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்று (ஏப்ரல் 28) கமிட்டி உறுப்பினர்களுக்கான ஓட்டுகள் எண்ணப்படுகிறது. மாலையில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறார்கள்.