நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
கடந்த 13-ந்தேதி தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்த பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டுக்கும் சென்று அவரை சந்தித்து பேசினார். இதனால் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், அதையடுத்து ரஜினி விடுத்த செய்தியில், மோடி அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்றபோதும், என்னை ஒரு நண்பராகவே சந்திக்க வந்தார். அவர் என் நலனில் எப்போது அக்கறை கொண்டவர். நான் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நேரில் வந்து நலம் விசாரித்தார். நான் வீட்டுக்கு வந்த பிறகும், அடிக்கடி போன் போட்டு நலம் விசாரித்தார். அதனால் அவர் எனது நண்பராகி விட்டார் என்றார்.
இந்நிலையில், மோடி-ரஜினி சந்திப்பு குறித்து சமீபத்தில் லதா ரஜினிகாந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில், மோடி ஒரு நல்ல மனிதர். எங்கள் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவர். அந்த வகையில், என் கணவரை அவர் ஒரு நண்பராகத்தான் எங்கள் வீட்டிற்கு வந்து சந்தித்தார். அந்த வகையில், அவர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை கவுரவப்படுத்தி விட்டார் என்று கூறியுள்ளார்.