தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வித்தகன் படத்திற்கு பிறகு படம் இயக்குவதை தள்ளி வைத்த பார்த்திபன், இப்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படம் மூலம் மீண்டும் இயக்குனர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் இந்த முறை நடிகராக களமிறங்கவில்லை. அதேசமயம், முதலில் இந்த படத்தை முற்றிலும் புதுமுகங்களை வைத்தே இயக்கப்போகிறேன் என்று சொன்னவர், இப்போது ஆர்யா,விஜயசேதுபதி, அமலாபால், டாப்சி,நஸ்ரியா என பலரை நட்புக்காக களத்தில இறக்கி விட்டிருக்கிறார்.
அதோடு, சிம்ரனை முதன்முறையாக ஒரு பாடல் பின்னணி பாட வைத்த பார்த்திபன், ஒரு பாடலுக்கு பிரபுதேவாவை நடனமாட கேட்டிருந்தார். அவரும் கண்டிப்பாக ஆடித்தருகிறேன் என்று சொன்னவர், இப்போது இந்தி படத்தில் தான் பிசியாக இருப்பதாக சொல்லி தனது இயலாமையை கூறுகிறாராம். அதனால், அந்த பாடலுக்கு யாரை நடனமாட வைக்கலாம் என்று யோசித்த பார்த்திபன், சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்து விட்டாராம்.
சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை கருதி, அவரை தனது வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு பாடலுக்கு தனுஷ் நடனமாட வைத்திருப்பது போன்று இப்போது பார்த்திபனும் அவரது வேல்யூ தெரிந்து நடனமாட வைக்கிறார். ஆக,பார்த்திபனின் கதையே இல்லாத படத்துக்கு ஒரு பெரிய கமர்சியல் கூட்டமே சேர்ந்து விட்டது.